ஆஸ்திரேலியாவில் புழுதி புயல்


ஆஸ்தி ரேலியாவின் கிழக்குப் பகுதியில் திடீரென வீசிய புழுதிப் புயலால் சிட்னி நகரமே சிவப்பு நிறமாக மாறிப் போனது. இந்த திடீர் செம்புழுதியால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

 மூச்சுத் திணறல் உள்ளிட்டவை ஏற்படலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததால் வெளியில் வந்தவர்கள் அனைவரும் முகமூடிகளை அணிந்து நடமாடினர். 

சிட்னி விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து  நிறுத்தப்பட்டது. மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் எதிரில் வருவது தெரியாத வகையில் புழுதி அடர்த்தியாக இருந்ததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
http://cache.daylife.com/imageserve/07hF19KelaaNK/610x.jpg

செவ்வாய் கிரகம் போல சிட்னி நகரமே மாறிப் போயிருந்தது. இதை பலர் வெளியில் வந்து பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். பலர் வியப்புக்குள்ளாகினர். பலருக்கோ பீதியாகி விட்டது. புரோக்கன் ஹில் நகரிலிருந்து தொடங்கிய இந்த புழுதிப் புயல் கிழக்கு ஆஸ்திரேலியா  முழுவதும் படிப்படியாக வீசி நகரங்களை செம்மையாக்கி விட்டது.
 http://cache.daylife.com/imageserve/08Q2fnqcsk7hq/610x.jpg
புழுதிப் புயல் வீசியபோது, மணிக்கு 60 மைல் வேகத்தி்ல் பலத்த காற்றும் வீசியது. இந்த புழுதிப் புயல் காரணமாக 50 லட்சம் டன் தூசி சிட்னி உள்ளிட்ட பகுதிக்குள் வந்து சேர்ந்து விட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மணிக்கு 75 ஆயிரம் டன் அளவுக்கு அடர்த்தியான தூசி சிட்னி நகரை மூடியது. இந்தப் புயல் பின்னர் பசிபிக் கடலில் போய் முடிந்தது.

ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு அனுபவம் இதுவரை ஏற்பட்டதில்லை என்று பலரும் தெரிவித்துள்ளனர்.
http://cache.daylife.com/imageserve/0fsheVu2BR20h/610x.jpg

0 comments:

Post a Comment