டில்லியை பிடிக்க 2 நாள் போதும்--சீனா மிரட்டல்


டில்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாட்கள் தான் ஆகும் என சீன இணையத்தளம் ஒன்று தெவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப் பியுள்ளது அந்த தளம்.

சீனா கடந்த 1ஆம் திகதி தனது 60 ஆவது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது இராணுவப் பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது.

ஆனால், அதே நேரத்தில் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை. மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி அருணாசல பிரதேசத்துக்கு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெவித்து வருகிறது.

மேலும், இந்தியாவுடனான எல்லைக்கோடான மெக் மோகன் கோட்டை தாண்டி பல றை அத்துமீறல் செய்து வருகிறது.

இதையடுத்து தற்போது இந்திய, சீன எல்லை பகுதி பதற்றம் நிறைந்தவையாக மாறியுள்ளது.
இந்நிலையில் தற்போது அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு சில மிரட்டல் இமெயில் வந்துள்ளன. அதில் சில வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்றில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட் டுள்ளது.
மற்றொன்றில் டில்லி மீது ஒரு வட்டம் போடப்பட்டுள்ளது. அதன் அருகே இந்த இடத்தை சீன இராணுவம் பிடிக்க இரண்டு நாட்கள் தான் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது.

இவை இரண்டும் ஒரு சீன இணையத் தளத் தில் இருந்து தான் அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து ஹிமாலயன் ஹொலிடேஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் டேங் வாங்கே கூறுகையில், அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்கள் அனைத்துக்கும் இது போன்ற மிரட்டல் இமெயில் வருகிறன. எங்களுக்கு சில இமெயில்கள் வந்துள்ளன. இது அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விஷயத்தை மத்திய அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதன்லம் அருணாச்சலம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை உறுதியாக தெவிக்க வேண்டும். அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment